
திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் !!
தமிழ் திரையுலகில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம், அறிமுகமானவர் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் ஒரு தனித்த, சிறப்பான கதை சொல்லியாக ஒரு அருமையான கமர்ஷியல் இயக்குநராக அனைவராலும் பாராட்டு பெற்றவர்.
தற்போது தனது சொந்த தயாரிப்பில், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘ரெக்கை முளைத்தேன்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக ஜீ5 தளத்திற்காக ‘கொலைகார கைரேகைகள்’ எனும் வெப் தொடரையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் சுந்தர பாண்டியன் படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை வென்றுள்ளார்.
தற்போது திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறுகையில்…
"திரையுலகில் 1...