கன்னிமாடம் – திரைவிமர்சனம்! – Rank 3/5
உள்ளங்கையில் அடங்கி விட்ட போனில் அடக்கமாகி விட்டது உலகம். அவ்வளவு சுருங்கி விட்ட இதே பூமியில் சாதி ஆதிக்கம் என்பது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாக வேர் விட்டு கிளை பரப்பி கோரமாய் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிரடியான நவீன சட்டங்கள், மாறிவரும் வாழ்வியல் பார்வைகள்., சாதி உணர்வையும், அதன் தீவிரத்தையும் முழுமையாக அடக்கி வைக்க முடியவில்லை.
ஒரு விஷயம் தெரியுமா?1990 வரை தமிழக காவல்துறை பதிவுகளில் கவுரவக் கொலை என்ற பதிவை அனேகமாக பார்க்க முடியாது. ஆனால், அப்போதும் கவுரவக் கொலைகள் இல்லாமல் இல்லை. அந்த காலகட்டத்திற்கு முன்பெல்லாம் அப்படி நடக்கும் கொலைகள் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதை பேசவே பயந்த காலமாக இருந்த நிலை மாறி, இன்று அவை விவாதத்திற்கு மட்டுமின்றி, அரசும், நீதிமன்றமும் இதை மிகக்கடுமையாக பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.
இது ஏதோ இந்தியாவில் மட்டும் என்றில்லை. உலகம் முழுமையும் பல ...