இன்று (மார்ச் 27) உலக திரையரங்க தினம் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960ம் ஆண்டில் உலகத் திரையரங்க தினம் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27ம் தேதி அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனத்தின் மூலம் கொண்டாடப்படுகிறது.
இன்று திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் உலக திரையரங்க தினம் கொண்டாடப்படவில்லை.. அடுத்த வருடம் சிறப்பாக கொண்டாடுவோம்.
தமிழ் படங்கள் மக்களை தொடர்ந்து பல ஆண்டுகளாக என்டெர்டெயன் செய்து வருகின்றன. தமிழ் மக்களுக்கு அதிக பட்ச பொழுது போக்கு என்றால் சினிமா பார்ப்பது மட்டுமே. இதனால் திரையரங்குகள் மூடப்படும்போது சினிமா தொழில் பாதிக்கப்படுகிறது. தியேட்டர்களில் வேலை செய்வோருக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆனால் இது முதல் முறையல்ல. திரையரங்குகள் முழுமையாக மூடப்படுவது இது 5 வது முறை. முன்னதாக ஒரு நாள், இருநாள் மூடபட்டு வந்த தியேட்டர்கள் இப்போது வாரக் கணக்கில் அடைக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல்
16வது மக்களவைத் தேர்தலின் காரணமாக 2014ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மாலை 6 மணி வரை திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பெயரில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். இதனால் அன்றைய தினம் தியேட்டர்கள் மூடப்பட்டன.
அப்துல்கலாம் மரணம்
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மரணித்திருந்த காரணத்தால் 2015ம் ஆண்டு தியேட்டர்கள் ஒரு நாள் அடைக்கப்பட்டன. ஜூலை 27ம் தேதி அப்துல்கலாம் இறந்தார். அவரது புனித உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற 30ம் தேதி அன்று திரையரங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வரி பிரச்சனை
2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரி பிரச்னை காரணமாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன. 10 சதவிகித கேளிக்கை வரியை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது.
டிஜிட்டல் பரொஜெக்டர்கள் பிரச்சனை
டிஜிட்டல் பரொஜெக்டர்களுக்கு அதிக விலை வசூலிப்பதாக டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்கள் மீது குற்றம் சாட்டி போராட்டம் நடந்தது. அப்போதும் திரையரங்குகள் மூடப்பட்டன.
கொரோனா
இந்நிலையில் தற்போது கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.. இது மட்டுமல்லாம், சினிமா ஷூட்டிங், சீரியல்கள், விளம்பரப்படங்கள் உட்பட பல நிறுத்தப்பட்டுள்ளன.